அறநிலையத்துறை புதிய நடவடிக்கை: கோயில் கார் பார்க்கிங் கட்டணங்களுக்கு இனி டிஜிட்டல் பில் மட்டுமே வழங்கப்படும்..
அறநிலையத்துறை புதிய நடவடிக்கை: கோயில் கார் பார்க்கிங் கட்டணங்களுக்கு இனி டிஜிட்டல் பில் மட்டுமே வழங்கப்படும்..தமிழகத்தில் உள்ள கோயில்களில் கார் பார்க்கிங் வசதிகளுக்காக வசூலிக்கப்படும் கட்டணங்களுக்கு இனி முழுமையாக டிஜிட்டல் முறையில் மட்டுமே ரசீதுகள் வழங்கப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.கோயில் நிர்வாகங்களில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும் வகையில் பல்வேறு புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்த அமைச்சர், கார் பார்க்கிங் கட்டண வசூல் உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளும் கண்காணிக்கப்படும் வகையில் டிஜிட்டல் மயமாக்கப்பட உள்ளதாக கூறினார்.மேலும், […]
திருச்செந்தூரில் இந்து மகா சபா ஆலோசனை கூட்டம்: 1008 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய தீர்மானம்!
**திருச்செந்தூரில் இந்து மகா சபா ஆலோசனை கூட்டம்: 1008 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய தீர்மானம்!***திருச்செந்தூர்:*இந்து மகா சபா தூத்துக்குடி அமைப்பு சார்பாக விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பான முக்கிய ஆலோசனை கூட்டம் திருச்செந்தூர் நகராட்சி அலுவலகம் எதிரில் உள்ள வணிக வளாக கட்டிடத்தின் மாடியில் வைத்து மாநில தலைவர் . சுந்தரவேல் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு மாநிலச் செயலாளர் சேர்மத்துரை முன்னிலை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர் அண்ணாசாமி வரவேற்புரையாற்றினார். அமைப்பு பொதுச்செயலாளர் ராம்குமார் சிறப்புரையாற்றினார், கூட்டத்தின் […]
லஞ்சம் வாங்கிய சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் கைது!
🚨 லஞ்சம் வாங்கிய சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் கைது!திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ஆலங்காயம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் (SSI) ராமகிருஷ்ணன், லஞ்சம் வாங்கியதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.விபத்தில் சிக்கிய வாகனத்தை விடுவிக்க பணம் கேட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறையினர் தீட்டிய திட்டத்தின் பேரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.புகார்தாரரிடம் இருந்து லஞ்சம் பெற்றபோது, சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் ராமகிருஷ்ணனை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் […]
திருப்பூர் மாநகராட்சிக்கு பாராட்டு வாட்ஸ்அப் புகாருக்கு இரண்டு மணி நேரத்தில் நடவடிக்கை
*📰 செய்திக்குறிப்பு* *பத்து ரூபாய் இயக்கத்தின் வாட்ஸ்அப் புகாருக்கு 2 மணி நேரத்தில் நடவடிக்கை – கோயில் வழி பேருந்து நிலைய ஆக்கிரமிப்புகளை அகற்றிய திருப்பூர் மாநகராட்சிக்கு பாராட்டு* *திருப்பூர், ஜூலை 28:* திருப்பூர் மாநகராட்சி மண்டலம்–3-க்கு உட்பட்ட கோயில் வழி பேருந்து நிலையத்தில், அங்குள்ள சில கடைக்காரர்கள் பொதுமக்கள் அமர்வதற்காக அமைக்கப்பட்டிருந்த நாற்காலிகளை தங்கள் கடைகளின் முன்பாக வைத்து ஆக்கிரமிப்பு செய்தும், பொதுமக்கள் நடந்து செல்லும் பொதுப் பாதையையும் பயன்படுத்த முடியாத வகையில் ஆக்கிரமித்து வந்ததாக […]
கோவில்வழி பேருந்து நிலையத்தில் பூட்டப்பட்டுள்ள மாநகராட்சி பொதுக் கழிப்பிடங்களை உடனடியாக திறக்க வேண்டும் – பத்து ரூபாய் இயக்கம் வலியுறுத்தல்*
திருப்பூர் *கோயில்வழி பேருந்து நிலையத்தில் பூட்டப்பட்டுள்ள மாநகராட்சி பொதுக் கழிப்பிடங்களை உடனடியாக திறக்க வேண்டும் – பத்து ரூபாய் இயக்கம் வலியுறுத்தல்* *திருப்பூர், ஜூலை 28:* திருப்பூர் மாவட்டம், திருப்பூர் தெற்கு தாலுகா, கோயில்வழி பேருந்து நிலையத்தில் திருப்பூர் மாநகராட்சியால் ஆண்கள் மற்றும் பெண்களுக்கென தனித்தனியாக இரண்டு நவீன பொதுக் கழிப்பிடங்கள் கட்டப்பட்டுள்ளன. ஆனால், கட்டுமானப் பணிகள் முடிவடைந்த பின்னரும் அவை இதுவரை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் பூட்டியே வைக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.இதன் காரணமாக பேருந்து […]
தூத்துக்குடியில் ஊடுருவ முயன்ற 12பேர் சிக்கினர் – டம்மி வெடிகுண்டுகள் பறிமுதல்!*’
*தூத்துக்குடியில் ஊடுருவ முயன்ற 12பேர் சிக்கினர் – டம்மி வெடிகுண்டுகள் பறிமுதல்!*’சாகர் கவாச்’ கடலோரப் பாதுகாப்பு ஒத்திகையின் போது, தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் கடற்கரை பகுதிகளில் டம்மி வெடிகுண்டுகளுடன் ஊடுருவ முயன்ற 12 பேரை கடலோரக் காவல் படை காவல்துறையினர் பிடித்துள்ளனர்.கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவுவதைத் தடுக்கும் ‘சாகர் கவாச்’ கடலோரப் பாதுகாப்பு ஒத்திகையின் போது, தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகம் மற்றும் திருச்செந்தூர் கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் மாதிரி வெடிகுண்டுகளுடன் ஊடுருவ முயன்ற 12 பேரை கடலோரக் […]
டாஸ்மாக் ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்.!
டாஸ்மாக் ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்.! நீண்ட நாள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு- அரசாணை இதோ..தமிழகத்தில் சுமார் 4,000க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் இயங்கப்பட்டு வருகிறது..இந்த டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் தினந்தோறும் 100 கோடி ரூபாய்க்கும் மேல் வருமானம் ஈட்டப்பட்டு வருகிறது. அதுவே பண்டிகை காலம் என்றால் இரண்டு மடங்காக விற்பனை அதிகரிக்கப்படுகிறது. இந்த நிலையில் டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிப்பதாக தொடர்ந்து புகார் வந்தது. இதனையடுத்து இதனை கட்டுப்படுத்த புதிதாக வந்த தவெக […]
ONE LAST TIME’: தளபதி விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெற்றிபெற திருப்பூர் மேற்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி வாழ்த்து!
‘ONE LAST TIME’: தளபதி விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெற்றிபெற திருப்பூர் மேற்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி வாழ்த்து!தலைப்புச் செய்திகள்:”ONE LAST TIME” என்ற சிறப்புக் குறிப்புடன் வெளியாகியுள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் C. ஜோசப் விஜய் அவர்களின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.திருப்பூர் மேற்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி சார்பில் இதற்கான வாழ்த்துப் போஸ்டர் வெளியிடப்பட்டு உற்சாகம் கொண்டாடப்பட்டுள்ளது.செய்தி விவரம்:திரை உலகில் பல சாதனைகளைப் படைத்து, தற்போது அரசியல் மற்றும் மக்கள் […]
திண்டுக்கலில் 1.200 கிலோ கஞ்சா பறிமுதல் காரில் கடத்திய 2 பேர் கைது
*திண்டுக்கலில் 1.200 கிலோ கஞ்சா பறிமுதல் காரில் கடத்திய 2 பேர் கைது*திண்டுக்கல் மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தலை தடுக்கும் நோக்கில் மாவட்ட காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின்பேரில், திண்டுக்கல் நகர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் கார்த்திக் மேற்பார்வையில் சார்பு ஆய்வாளர் காதர் மைதீன் தலைமையிலான தனிப்படை போலீசார் திண்டுக்கல் சௌந்தரராஜா மில் அருகே வாகன சோதனை நடத்தினர்.அப்போது அவ்வழியாக சந்தேகத்திற்கிடமாக வந்த காரை போலீசார் மடக்கி சோதனை […]
அமைச்சர் திரு N. ஆனந்த் பிறந்தநாள் திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளர் திரு ஜி கே சங்கர் அவர்களின் வழிகாட்டுதலில் மகாத்மா கருணை இல்லத்தில் அன்னதானம்!
அமைச்சர் திரு. N. ஆனந்த் பிறந்தநாள்: திருப்பூர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. GK. சங்கர் அவர்களின் வழிகாட்டுதலில் மகாத்மா கருணை இல்லத்தில் அன்னதானம்!திருப்பூர்: ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் திரு. N. ஆனந்த் அவர்களின் பிறந்தநாளை, திருப்பூர் மேற்கு மாவட்டக் கழகம் சார்பில் மிகச் சிறப்பாகவும், அர்த்தமுள்ள வகையிலும் கொண்டாடப்பட்டது.திருப்பூர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. GK. சங்கர் அவர்கள், ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் திட்டங்களை வகுத்துச் […]